'லவ் பண்ணுவாங்க இந்த கேரக்டர'ன்னு ரஜினி சார் சொன்னார்- 'சந்திரமுகி' வேட்டையனின் சுவாரசியங்களை பகிர்ந்த Pவாசு! ட்ரெண்டிங் வீடியோ

சந்திரமுகியின் வேட்டையன் கேரக்டர் பற்றி பேசிய Pவாசு,Director p vasu about rajinikanth confidence on vettaiyan in chandramukhi | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பணக்காரன், மன்னன், உழைப்பாளி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் P.வாசு அவர்கள் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த சந்திரமுகி திரைப்படத்தையும் இயக்கினார். கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனை படைத்திருக்கும் சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் அவர்கள் கதாநாயகனாக நடிக்க சந்திரமுகி 2 திரைப்படத்தையும் P.வாசு அவர்கள் உருவாக்கி இருக்கிறார். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த இயக்குனர் P.வாசு அவர்கள் சந்திரமுகி திரைப்படம் குறித்த பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும்போது, “சந்திரமுகி திரைப்படத்தில் ஜோதிகா அவர்களின் கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக மக்கள் மனதில் பதிந்து விட்டது இது ஒரு புறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வேட்டையன் எனும் கதாபாத்திரம் மிகக் குறைவான நேரமே வந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் படம் வெளியான பிறகு இந்த கதாபாத்திரத்தை இன்னும் நிறைய வைத்திருக்கலாம் என பலரும் விரும்பினர். அந்த கதாபாத்திரம் அந்த அளவிற்கு நிறைய இருந்ததா? அது படமாக்கப்பட்டதா? இல்லை அவ்வளவு தான் இருந்ததா?" எனக் கேட்ட போது, 

“அது நிறைய இருந்தது… ஆனால் அந்த கதாபாத்திரத்தை அதிகமாக வைத்துக் கொண்டால் சந்திரமுகி கதாபாத்திரம் விழுந்து விடும் இதில் சந்திரமுகி நின்றால் தான் படம் ஹிட் ஆகும். இதில் வேட்டையன் நின்று விட்டால் கதையின் சாரா அம்சம் வேற மாதிரி ஆகிவிடும் என்பதால் வேட்டையன் கதாபாத்திரத்தை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ அவ்வளவு தூரம் குறைக்க வேண்டும் என்பது தான் ரஜினி சார் உடைய விஷயமும். எனவே அதில் ஒரு கிக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு அந்த தலையை வெட்டும் காட்சி தலையை வெட்டிய பிறகு அவர் பார்ப்பார் அது மட்டும் தான் நான் சொன்னது, “சார் தலையை வெட்டுகிறீர்கள் பார்க்கிறீர்கள் அவளை எரிக்கிறீர்கள்” என்று தான். இவர் என்ன செய்தார் என்றால் நான் எதிர்பார்க்கவே இல்லை, தலையை வெட்டியவுடன் அந்த டம்மி உருட்டி விட அவர் கால் அருகில் வந்து விழும். அவர் எங்களிடம் எல்லாம் சொல்லவே இல்லை தலை அப்படி விழுந்தவுடன் எட்டி உதைத்து விட்டார். அவர் உதைத்த தலை வந்து கேமராவில் அப்படி போகிறது. நான் அவரிடம் கேட்டேன், “என்ன சார் தலையை வெட்டிவிட்டு இப்படி பார்த்து விட்டு வருவீர்கள் என்று பார்த்தால் உடைத்து விட்டீர்கள். உதைத்தால் மிகவும் கொடூரமாக இருக்கிறது” என கேட்டேன். உதைத்தால் மிகவும் கொடூரமாக இருக்கிறது சார் பெண்கள் எப்படி பார்ப்பார்கள் அதுவும் உங்களை எப்படி பார்ப்பார்கள்?” என கேட்டேன். அப்போது அவர் சொல்கிறார், “சார் லவ் பண்ணுவாங்க இந்த கேரக்டரை லவ் பண்ணுவாங்க நீங்க பாருங்க… நீங்க கவலைப்படாதீர்கள் நான் நான் உதைத்தது இன்னும் பெரிதாக இருக்கும்” என்றார். அதே மாதிரி திரையரங்குகளில் அவர் காலால் உதைக்கும் போது “அடேங்கப்பா!” என்பது போல் இருந்தது. இது மாதிரி சில விஷயங்கள் எல்லாம் அவர் பக்காவாக தீர்மானித்து செய்வார்” என தெரிவித்துள்ளார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் பி வாசு அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.