கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் இன்று  திறக்கப்பட்டது.

corono

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. 

அதனைத்தொடர்ந்து கொரோனா நோய் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை கடந்த 27-ம் தேதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு, பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது. நோய் தொற்று பாதிப்பு இருந்துவரும் இந்த சூழ்நிலையிலும், பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் செயல்படவுள்ளன.

இந்நிலையில்  பள்ளிகளைப் பொறுத்தவரையில், முதலில் 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. அந்தவகையில் இன்று திறக்கப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்திருக்கிறது.

மேலும் தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்கனவே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், நேரடி வகுப்புகளைதான் அதிகம் விரும்புவது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளை பார்க்கும்போது, ஆன்லைன் வகுப்பு என்பது கல்வி தொலைக்காட்சி வாயிலாக மட்டுமே நடந்து வருகிறது. சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் முயற்சியின் காரணமாக வாட்ஸ்-அப் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கல்வித் துறையின் உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் இருக்கும் பகுதிகளில் மட்டும் சூழ்நிலைக்கு ஏற்ப நேரடி வகுப்புகளை குறைத்து, ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தவும் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத்தொடர்ந்து கல்லூரிகளிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நேரடி வகுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில், முககவசம், சமூக இடைவெளி, கைகளை அவ்வப்போது சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு கழுவுவது போன்ற அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த பள்ளிகள், கல்லூரிகளுக்கு கல்வித்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.