மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைக்காத நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அன்று சீனுராமசாமி கண்டெடுத்த பொக்கிஷம், இன்று திரைத்துறையின் கௌரவம்... என போற்றப்படும் நாயகன். கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து பேசியுள்ளார் விஜய்சேதுபதி. பிரபல மீடியாவிற்கு லைவ்வில் தோன்றியவர், மாஸ்டர் படத்தில் தான் கொடூரமான வில்லனாக நடித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். முழுக்க முழுக்க வில்லன் தான்.. துளி கூட நல்லவனே கிடையாது என்று தனது ரோல் பற்றி பேசியுள்ளார். விஜய்சேதுபதியின் வில்லத்தனத்தை மாஸ்டர் பட ரிலீஸின் போது பார்க்க ஆவலாக உள்ளனர் திரை விரும்பிகள். கேங்ஸ்டர் பவானியாக நடித்திருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இதை உறுதிபடுத்தும் வகையில் அமைந்துள்ளது இச்செய்தி. 

மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.