தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்.இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகும் இவரது இன்ஸ்டாகிராமில் இவர் போடும்  லைக்குகள் அள்ளும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கழித்து வருகின்றனர்.ஷெரின் ரசிகர்களுடன் டச்சில் இருக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.

டிக்டாக்கிலும் தவறாமல் தினமும் வீடியோ போட்டுவிடுவார் ஷெரின்.இவரது டிக்டாக் வீடியோக்கள் ரசிகர்களிடம் ட்ரெண்ட் அடித்து விடும்.நேற்று இந்திய அரசு சீனா தயாரித்த 59 செயலிகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த செயலிகள் பயனாளர்களின் பெர்சனல் விஷயங்களை திருடுவதாக குற்றம் சாட்டி இந்த செயலிகளை தடை செய்தனர் இந்திய அரசாங்கம்.இதில் பயனர்கள் அதிகம் உள்ள டிக்டாக்,ஹலோ உள்ளிட்ட முக்கிய செயலிகள் இடம்பெற்றன.

டிக்டாக் பல பயனர்களின் தினசரி பொழுதுபோக்காக இருந்து வந்தது.இதனை தடை செய்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செயலி தடை செய்யப்பட்டதை அடுத்து ,தங்களது கடைசி டிக்டாக் வீடீயோவை பகிர்ந்து வருகின்றனர்.இந்த வரிசையில் தற்போது ஷெரின் இணைந்துள்ளார்.ஷெரின் தனது கடைசி டிக்டாக் வீடீயோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்