கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.லாக்டவுன் தொடங்கியது முதல் இப்போது வரை ஒளிபரப்பட்ட தமிழ் படங்களில் அதிக TRP-யை அள்ளிய ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம்.முதல் இடத்தை 1.53 கோடி பார்வையாளர்களுடன் விஜயின் பைரவா திரைப்படம் பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தில் 1.51 கோடி பார்வையாளர்களுடன் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 பிடித்துள்ளது,மூன்றாவது இடத்தில் 1.45 கோடி பார்வையாளர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் உள்ளது,நான்காவது இடத்தில் 1.346 கோடி பார்வையாளர்களுடன் விஜயின் கில்லி படம் பிடித்துள்ளது,ஐந்தாவது இடத்தில் 1.345 கோடி பார்வையாளர்களுடன் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் உள்ளது.இந்த ஐந்து படங்களில் ரஜினியின் தர்பார் மட்டுமே முதல் முறை டிவியில் ஒளிபரப்பான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.