கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.தற்போது 27ஆவது வாரத்திற்கான TRP ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி ஞாயிற்றுக்கிழமை ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பான தளபதி விஜயின் பைரவா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பட்ட தனி ஒருவன் மற்றும் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான புலி படங்கள் உள்ளன.இதில் பைரவா படம் 1.53 கோடி பார்வையாளர்களை பெற்று தனது முதல் முறை ஒளிபரப்பட்ட சாதனையை முறியடித்துள்ளது.மேலும் இந்த லாக்டவுனில் ஒரு கோடி பார்வையாளர்களை பெரும் நான்காவது விஜய் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது முன்னதாக கில்லி,வேட்டைக்காரன்,ஜில்லா படங்கள் இந்த சாதனையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் லாக்டவுனில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையையும் பைரவா படம் படைத்துள்ளது.