ஊடகம், காளான் வளர்ப்பு, மருத்துவம் ஆகியத்துறைகளின் தொழில் செய்து வரும் சீனாவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன், சீனாவின் பிரபல தொழிலதிபரான ஜாக் மா உள்ளிட்டோர்களை முந்தி தற்போது ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியிருக்கிறார்.

2020 ஆம் ஆண்டு ஜாங் ஷான்ஷனின் சொத்து மதிப்பானது, 70.9 பில்லியன் டாலரில் இருந்து 77.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பிற பணக்காரர்கள் ஈடுபடும் தொழில்களிலும் ஈடுபடவில்லை. அவர் வெற்றிப் பெற்ற இரு துறைகளும் அவருக்கும் சம்பந்தமில்லாத துறைகள் என்பது தான் அவரின் தனிச்சிறப்பு. சீனாவின் ‘லோன் வூல்ப்’ என்று அழைக்கப்படுகிறார்.


முகேஷ் அம்பானி செய்த தொழில் மாற்றங்கள் அவரது சொத்து மதிப்பை 18.3 பில்லியன் டாலரில் இருந்து 76. 9 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. இந்த வருடம் அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரர் ஆக ஆவதற்கு முன்பு அந்த  இடத்தில் ஜாக் மா இருக்கிறார். முகேஷ் அம்பானி, ஜாக் மா ஆகிய தொழிலதிபர்களை பின்னுக்குத்தள்ளி சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இடம்பிடித்து இருப்பது அனைவருக்கும் ஆச்சிரியத்தைக் கொடுத்துள்ளது.