“திருமணம் செய்துகொண்ட செக்ஸ் பொம்மை சேதம் அடைந்துவிட்டது, இப்ப நான் என்ன செய்ய?” என்று, பாடி பில்டர் யூரி டோலோச்கோ, வருத்தப்பட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். 

கஜகஸ்தான் நாட்டில் பிரபல பாடி பில்டராக உள்ள யூரி டோலோச்கோ, சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். 

இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு மார்கோ எனப்படும் செக்ஸ் பொம்மை ஒன்றை, வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார். இதனையடுத்து, அந்த செக்ஸ் பொம்மை உடன், அந்த பிரபல பாடி பில்டர் யூரி டுாலோச்கோ, கடந்த 8 மாதங்களாக பாலியல் உறவில் இருந்து வந்திருக்கிறார். இந்த தகவலை அவேரே, தெரிவித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த செக்ஸ் பொம்மையான மார்கோவை காதலிப்பதாக, அவர் அறிவித்தார். இதற்கு, அந்நாட்டு மக்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். 

இதனால், யாரும் யோசித்துக்கூட பார்க்காத நிலையில், சற்று வித்தியாசமாக யோசித்த அவர், “நான் அந்த செக்ஸ் பொம்மையை திருமணம் செய்யப்போவதாக” அறிவித்தார். 

பிரபல பாடி பில்டரான யூரி டோலோச்கோவின் பொம்மையுடனான காதலுக்கு, அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர். 

அதன் படி, பொம்மை உடனான அவரது திருமணம், கடந்த மார்ச் மாதம் நடைபெறும் என்று, யூரி டோலோச்கோ ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், அப்போது, உலகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவித் தொடங்கியதால், அவரது பொம்மை உடனான திருமணம் அப்படியே, அடுத்தடுத்து தள்ளிப் போனது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்து உள்ள நிலையில், மீண்டும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த அவர் திட்டமிட்டார். 

அப்போது, யூரி டோலோச்கோ எதிர்பாராத விதமாக, திடீரென்று ஒரு சிறிய விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக, அவரது திருமணம் மீண்டும் தள்ளிப் போனது. 

இதனையடுத்து, அதிலிருந்து குணமடைந்த அவர் செக்ஸ் பொம்மையான மார்கோவிற்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பையும், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். 

அதில், “மார்கோ தனது தோற்றத்தில் அதிகம் அக்கறை கொள்வதாகத் தான் உணர்வதாகவும்” யூரி தெரிவித்து இருந்தார். அவர் காயத்திலிருந்து முழுவதுமாக குணமான நிலையில், தற்போது ஒரு வழியாக யூரி டோலோச்கோ - மார்கோ திருமணம் கடந்த நவம்பர் மாதம் மத்தியில் நடந்து முடிந்து உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும், யூரி டோலோச்கோ அப்போது வெளியிட்டு இருந்தார். 

முக்கியமாக, அந்த வீடியோவை “இனியும் தொடரும்” என்ற ஆங்கில வாசகத்துடன், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். 

இதற்கு முன்பாக, சிலிகான் வகை பொம்மையான செக்ஸ் பொம்மையான மார்கோவுடன் தான் அதிக நேரம் செலவிட்ட புகைப்படங்களை, அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யூரி டோலோச்கோ, தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார். 

இதில் குறிப்பாக, அவர் மார்கோ பொம்மையுடன் வெளியே செல்வது, இதனால், யூரியின் திருமணம் தொடர்பான வீடியோ தற்போது இணையவாசிகள் இடையே அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள், செக்ஸ் பொம்மையான மார்கோவை கையாளும் போது, தான் தெரியாமல் அதனை உடைத்து விட்டதாக” யூரி தெரிவித்துள்ளார். 

மேலும், செக்ஸ் பொம்மையான மார்கோ இப்போது பழுது பார்ப்பதற்காக கடையில் கொடுத்து உள்ளதாகவும், திருமணமாகி தங்களின் முதல் கிறிஸ்துமஸ் நாளை சிறப்பாக கொண்டாட காத்திருந்த நேரத்தில், தன்னுடைய தவறால் அது நடக்க முடியாமல் போனது” என்றும் யூரி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். இந்த பதிவு இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.