வந்தவாசியில் ஃபேஸ்புக் காதலால் சிறுமிக்கு மதுபானத்தை ஊற்றி காதலன் உட்பட 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரங்கேறும் மோசடிகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த சம்பவமும் கூட்டுச் சேர்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

அதேபோல், கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த இலியாஸ் என்ற இளைஞர், ஃபேஸ்புக் மூலம் அந்த 15 வயது சிறுமிக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இதன் காரணமாக, இருவரும் ஃபேஸ்புக்கில் தங்களது நட்பை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நட்பால், அந்த சிறுமி மற்றும் இலியாஸ் இருவரி யார் எந்த பதிவு போட்டாலும், அவர்கள் இருவரும் மாறி மாறி தங்களது கருத்துக்களை முந்தி அடித்துக்கொண்டு பதிவு செய்து வந்தனர்.

மேலும், தனியாக ஃபேஸ்புக் இன்பாக்ஸ் மூலமாக சிறுமியை “ஆகா, ஓகோ, அழகியே,” என்று புகழ்பாடி இளைஞன் இலியாஸ், அந்த சிறுமிக்கு காதல் வலை விரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இளமைப் பருவம் என்பதால், பக்குவம் இல்லாத சிறுமியும் இலியாஸினை நம்பி, அவரது காதலை ஏற்றுக்கொண்டு பழக ஆரம்பித்ததாகவும் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

அதன்படி, அந்த 15 வயது சிறுமியை திட்டமிட்டே, “வா வெளியே ஜாலியாக போய் வரலாம்” என்று, காதலன் இலியாஸ் அழைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, காதலனை நம்பி அந்த 15 வயது சிறுமியும், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி தனியாகக் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து, தனது வாகனத்தில் சிறுமியை ஏற்றிக்கொண்ட இலியாஸ், வந்தவாசி புறவழிச்சாலைக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சிறுமியை அழைத்து வந்துள்ளார். அந்த இடத்தில், இலியாஸ் நண்பர்களான பர்கத், சூர்யா ஆகிய இருவரும் அங்கு ஏற்கனவே வந்து மறைந்து நின்றுள்ளனர்.

சிறுமியை இலியாஸ் அழைத்து வந்ததும், காதலன் உட்பட அந்த 3 இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை மிரட்டியும், தாக்கியும் பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். குறிப்பாக, சிறுமிக்கு மதுபானத்தை ஊற்றி 3 பேரும் மாறி மாறி வெறிபிடித்தார் போல், பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, அவர்களிடமிருந்து தப்ப முடியாமல், அந்த காம வெறிபிடித்த இளைஞர்களிடம் இரையாகி உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை அவர்கள் விடுவித்துள்ளனர். அழுதுகொண்டே நடக்க முடியாமல் நடந்து வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை, தன் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுமியை நாசம் செய்த காதலன் இலியாஸ், சூர்யா, பர்கத் ஆகிய 3 பேரையும், போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், இது போன்று இன்னும் எத்தனை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளீர்கள் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சிறுமிக்கு மதுபானத்தை ஊற்றி வன்கொடுமை செய்ததால், கடும் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், அந்த 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி, அந்த 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த 3 பேரும் வேலூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டனர்.