கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலாகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி, காய்கறி கடைகள், தியேட்டர்கள் மற்றும் அனைத்து வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சூழல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளிகளில் செல்லும் போது முக கவசம் கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.