தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சந்தைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.


மேலும் அவர், ‘’விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்பதற்காக 10 மாவட்ட தலைநகரத்தில் 20 கோடி ரூபாய் செலவில் சந்தைகள் கட்டப்படும். அது போன்ற ஒரு பிரம்மாண்ட சந்தையை நெல்லையிலும் கட்ட அரசு பரிசீலிக்கும்.


அம்மாவுக்கு பிறகு அதிமுகவின் ஆட்சியை கலைக்க திமுக எத்தனையோ முயற்சிகளை செய்தது. ஆனால் அது அத்தனையும் தகர்த்து, முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இரவு, பகல் பாராமல் இரத்தத்தை பூமியில் சிந்தி உழைக்கும் விவசாயி நான்” என்றார். 

 
கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள், மாஸ்க் அணியாமல் வெளியில் சென்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது தமிழக அரசு.