’தமிழக மீனவர் 4 பேரை இலங்கை கடற்படை கொடூரமாக கொலை செய்துள்ளது. சமீபத்தில்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதற்கு  மத்திய அரசு, இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் ‘ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த தோழர்களுக்கு பாராட்டு விழாவின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


மேலும் அவர், ‘’ மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தி தரவேண்டும். ஆட்சி முடிவதற்குள் ஆளும் கட்சியினர் திட்டங்கள் மூலம் கொள்ளை அடிக்க நினைக்கிறார்கள்.  இவ்வளவு நாளாக கொரோனா தொற்று வராமல் இப்பொழுது எப்படி சசிகலாவுக்கு கொரோனா வந்தது? சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது என சந்தேகம் வருகின்றது. ” என்று தெரிவித்துள்ளார்.