நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்ததினமான இன்று கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துக்கொண்டார். 
அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘’ நேதாஜி எப்போதும் நமக்கு முன்மாதிரியாக உள்ளார்.

நேதாஜியின் மொத்த வாழ்க்கையுமே , நமக்கு பாடம். இந்தியர்களின் சுதந்திரம் குறித்து அவர் பெரிய  கனவு கண்டார். நாட்டின் தைரியத்திற்கு அடையாள சின்னம் நேதாஜி.  
நம் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், நாம்  தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். பிற நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்குவதை பார்த்தால் நேதாஜி பெருமை அடைந்திருப்பார். அவர் கனவு கண்ட சக்திவாய்ந்த இந்தியாவை இப்போது உலகமே பார்த்துக்கொண்டு இருக்கிறது. 


நமது இந்நியா தன்னிறைவு பெற நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே தன்னிறைவு பெற்ற நாடாக மாறி தமது இலக்கை அடைய முடியும். நாட்டின் அனைத்து மொழிகள், கலாச்சாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “ என்றார்.