சிறுமிகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை இணைய தளங்களில் தேடித் தேடி எடுத்து, நண்பர்களுக்கும் பகிர்ந்தவர்கள் என ஒட்டு மொத்தமாக 28 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கேரளா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறப்படுகிறது.

இந்தியாவில் சிறுவர் - சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கும் செய்தியாகவே உள்ளது.

இப்படியாக, சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தவிர்க்கும் விதமாகத் தமிழகக் காவல் துறை கடந்த சில மாதங்களாகவே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனால், சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் பரப்புவார்கள் தொடர்பான விபரங்களை போலீசார் சேகரித்து வந்தனர். அத்துடன், அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடந்த காலங்களில் தமிழக போலீசார் தரப்பில் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன் படியும், சிலர் அடுத்தடுத்து தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக, “சிறுமிகளை ஆபாசப் படம் பார்த்துப் பரப்பியதாகத் தமிழகத்தில் முதன் முதலாகத் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தனர். இதனால், தமிழகத்தில் ஆபாசப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வந்தவர்கள் பீதியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆனால், இந்த முறை தமிழக போலீசாரை போலவே, கேரளா மாநில போலீசார் திடீரென்று அதிரடியான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இந்த அதிரடியான சோதனையின் முடிவில் ஆபாசப் படம் பார்த்தவர்கள் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் என்று மொத்தமாக 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

அதாவது, கடந்த ஞாயிறு அதிகாலை முதல் 310 பேர் கொண்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் இந்த அதிரடியான சோதனையில் ஈடுபட்டனர். 

இப்படியாக, கேரளா மாநிலம் முழுவதும் 176 பகுதிகளில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட இந்த அதிரடியான சோதனையில், 5 வயதிலிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் வைக்கப்பட்டிருந்த செல்போன், மோடம், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு, லேப்டாப், கணிப்பொறி உட்பட 429 டிஜிட்டல் உபகரணங்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
 
குறிப்பாக, இந்த சோதனையின் போது சிறுமிகளின் ஆபாசப் படங்களைத் தேடியதாகவும், ஆபாசப் படங்களைப் பரப்பியதாகவும் 28 பேர் கைது செய்யப்பட்டனர். 

“இப்படியாக, செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் பல உயர்ந்த துறைகளில் பணிபுரியும் இளைஞர்கள் என்பது தெரிய வந்ததுள்ளதாக” கேரளா போலீசார் கவலைத் தெரிவித்தர். இதனால், கேரளா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.