இளைஞரின் கையை வெட்டிய முதியவர்! பப்ஜியால் விபரீதம்!

இளைஞரின் கையை வெட்டிய முதியவர்! பப்ஜியால் விபரீதம்! - Daily news

திருப்பூரில் இரவுநேரத்தில் தூங்க விடாமல், நண்பர்களுடன் பப்ஜி விளையாடி இடையூறு செய்த இளைஞரை, அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார். 

PUBG

திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அவருக்கு 19 வயதாகிறது. இவர் தாராபுரத்தில் உள்ள அரசு ஐடிஐ-யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பப்ஜி விளையாட்டில் மூழ்கி கிடந்த கார்த்திக், நாள்தோறும் தனது நண்பர்களுடன் பப்ஜி விளையாடி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து வழக்கம்போல் கார்த்திக் ‘பப்ஜி’விளையாடி உள்ளார். 

இந்நிலையில்  பக்கத்து வீட்டை சேர்ந்த ராமசாமி என்பவர், சத்தம்போட்டு விளையாடுவதால் தூங்குவதுக்கு இடையூறாக இருப்பதாக கூறி கார்த்திக்கிடம் தெரிவித்துள்ளார். அப்போது, இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி, தனது வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டினார். இதில், கார்த்திக்கின் கையில் வெட்டுக்காயம்  ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியர் ராமசாமியை கைது செய்தனர். இரவில் பப்ஜி விளையாடி தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment