நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி தூக்கில் தொங்கிய வாலிபர்!

நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி தூக்கில் தொங்கிய வாலிபர்! - Daily news

சென்னை பெரியமேடு பகுதியில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் மதுரையைச் சேர்ந்த பிரபுகாந்த் என்ற இளைஞர், லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபுகாந்த் என்ற 21 வயது இளைஞர், தீபா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தீபா கடந்த மாதம் இறந்துவிட்டார், இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரபுகாந்த் யாரிடமும் சரியாக பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். அதன்பிறகு சென்னைக்கு சென்று செல்வதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு வந்த பிரபுகாந்த், பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டு தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தற்கொலை முடிவை எடுத்த பிரபுகாந்த் தனது வாட்ஸ் அப் மூலம், வீடியோ பதிவு செய்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார். அதில் இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு நன்றி, அப்பா மற்றும் அத்தை என்னை மன்னித்துவிடுங்கள், பார்த்துக்கோங்க, யாரையாவது நான் கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று பேசியிருக்கிறார். அதோடு தற்கொலை முன்னதாக கடிதம் ஒன்றும் பிரபுகாந்த் எழுதி வைத்துள்ளார்.

மேலும் பிரபுகாந்தின் அனுப்பிய வாட்ஸ் அப் வீடியோவை பார்த்த அவரது நண்பர்கள், உடனடியாக அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது பிரபுகாந்த், காதலி தீபா இல்லாமல் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து அவரது நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின்பேரில் மெரியமேடு காவல்துறையினர் பிரபுகாந்த் தங்கி இருந்த லாட்ஜிக்கு சென்று பார்த்த போது, அங்கு அவர் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து அவரடு உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்பு பிரபுகாந்த் எழுதிய கடிதம் மற்றும் அவரது செல்போனை பைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி இறந்த துக்கம் தாளாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment