விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்த சீரியல்களில் நடித்த பலரும் ரசிகர்களின் பேராதரவை பெற்று நட்சத்திரங்களாக மாறி உள்ளனர்.பலர் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி.

இந்த தொடரின் நாயகனாக அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் ராஜு நடித்து வந்தார் சில காரணங்களால் அவர் விலக அவருக்கு பதிலாக ஸ்வாமிநாதன் புதிய ஹீரோவாக நடித்து வருகிறார்.பிரியங்கா குமார் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

2021 ஜனவரி மாதம் தொடங்கிய இந்த தொடர் , வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.250 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் ஹிட் தொடராக ரசிகர்கள் மத்தியில் முன்னேறியுள்ளது.

தற்போது இந்த தொடரின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.ரசிகர்களின் ஆதரவோடு மாலை 6 மணிக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் , வரும் திங்கள் டிசம்பர் 20ஆம் தேதி முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.