திருமணம் முடிந்த மறுநாளே தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்கு வந்த கணவன்-மனைவி கொரோனா நோயாளிகளின் உடலை தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவொரு தம்பதியினருக்கும் திருமணம் என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய நிகழ்வு. அந்த திருமணத்தை பலரும் மறக்க முடியாத அளவிற்கு கொண்டாடும் வகையில் அமைய மணமக்கள் விரும்புவர்.

மேலும் திருமணத்திற்குப் பின் புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக இருக்க தேனிலவு செல்வார்கள். ஆனால் திருமணமான உடனேயே ஒரு ஜோடி தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்கு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newlyweds malaysia

அப்படிப்பட்ட ஒரு ஜோடியின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதுமண தம்பதிகள் இருவரும் சேர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மயானத்தில் செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான் மற்றும் அவரது மனைவி நூர் அஃபிஃபா ஹபீப் (26) ஆகிய இருவரும்  டிசம்பர் 13 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்குச் செல்வதற்குப் பதிலாக, கணவனும் மனைவியும் கொரோனா முன்களப் பணியாளராக மாற முடிவு செய்தனர்.

அதன்படி திருமணமான முதல் வாரத்தில் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை செய்ய புதுமணத் தம்பதிகள் முடிவு செய்தனர். 

தேனிலவுக்கு பதிலாக கல்லறையில் கொரோனா இறந்த நோயாளிகளுக்காக தங்களது நாட்களை புதுமண தம்பதிகள் செலவிட நினைத்த இந்த முடிவை பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

newlyweds malaysia

மணமகன் ரிட்ஜீவன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காங்குல்-கி குழுவில் உறுப்பினராக உள்ளார். திருமணம் முடிந்த அடுத்த நாளே கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கொரோனா மருத்துவ குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறியுள்ளார்.

இதை அவர் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் ஆவேசப்படாமல் நூர் அஃபிஃபா ஹபீப், தனது கணவருடன் தானும் வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து புதுமணத் தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர்.

சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடலை புதுமணத் தம்பதியினர் தகனம் செய்தனர். ரித்ஜீவன் அங்கம் வகிக்கும் குழுவில் சமூக சேவைக்காக அதனுடன் இணைந்த பலர் உள்ளனர். 

இவர்கள் வேறு இடங்களில் பணிபுரிந்தாலும் சமூக சேவைக்காக இந்த குழுவிற்கு உதவுகிறார்கள். அதே நேரத்தில் இந்த குழுவுக்கான தங்கள் பணி இப்போதைக்கு நிற்கப் போவதில்லை என்று புதுமணத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். 

திருமணத்திற்குப் பிறகு தம்பதியினர் இதுவரை 15 கொரோனா நோயளிகளின் உடல்களை எரித்துள்ளனர். இந்த ஜோடியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.