"வாழ்நாளில் மறக்க முடியாது!"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இணைந்த தருணம் குறித்து பேசிய ஸ்டண் சிவா! வைரல் வீடியோ

ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் இணைந்த தருணம் குறித்து ஸ்டண் சிவா,stun siva about how he joins with nelson for rajinikanth in jailer movie | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக வெளிவந்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம். கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் பூர்த்தி செய்யாத நிலையில் தற்போது பக்கா மாஸ் ஆக்சன் என்டரடெய்னராக வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக மலையாள நடிகர் விநாயகன் மிரட்டலான வில்லனாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பலம் எது என புரிந்து மிகச் சரியாக அவை அனைத்தையும் அரங்கேற்றி ஜெயிலர் திரைப்படத்தை பக்கா ட்ரீட்டாக நெல்சன் கொடுத்திருக்கிறார் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 90 கோடி - 100 கோடி வரை ஜெயிலர் திரைப்பட வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த ஜெயிலர் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சிவா அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “முதன் முதலில் இயக்குனர் நெல்சன் அவர்கள் இந்த ஜெயிலர் கதையை உங்களிடம் கொண்டு வந்த போது இப்படி ஒரு மாஸ் கமர்சியல் விஷயம் தலைவருக்கு என்று வைத்திருக்கிறோம் நீங்கள் தான் ஸ்டண்ட் இயக்குனதாக பணியாற்ற வேண்டும் என சொல்லும் போது உங்கள் மனதில் என்ன எதிர்பார்ப்புகள் இருந்தன?” எனக் கேட்டபோது, 

“நெல்சன் சாருக்கு ரொம்ப நன்றி சொல்ல வேண்டும். கோலமாவு கோகிலா திரைப்படத்தின் போஸ்டர் பார்த்த போது மிகுந்த சந்தோஷம் அடைந்தேன் யார் இயக்குனர் என்று பார்த்தேன்.. நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிக்கிறார்கள் எனவே இந்த இயக்குனரோடு பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். நானே அவருக்கு போன் செய்து பேசினேன் . அதன் பிறகு இரண்டு படங்களில் பணியாற்ற முடியவில்லை. இருந்தாலும் நான் FOLLOW பண்ணிக் கொண்டே இருந்தேன் சகோதரர் நெல்சன் எனக்கு இவ்வளவு பெரிய படம் கொடுத்தது என் வாழ்நாளில் நான் மறக்க முடியாது. அவர் போன் செய்து, "மாஸ்டர் ரஜினி சார் படம் பண்ணுகிறேன் நீங்கள் தான் FIGHT மாஸ்டர்" என்று சொன்னார் அதன் பிறகு அவருடன் இணைந்து பணியாற்றியது ஒரு இயக்குனராக அல்லாமல் ஒரு சகோதரராகவே மிகவும் நெருக்கமாக பழகினார் . அவருக்கு என்னை ரொம்ப பிடித்திருந்தது.” என்றார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஸ்டன் சிவா அவர்களின் பேட்டி இதோ…