"நடிப்பதைத் தாண்டி பொம்மை படத்தை தயாரிக்க காரணம் என்ன?"- முதல் முறை உண்மையை உடைத்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ

பொம்மை படத்தை தயாரித்ததற்கான காரணத்தை தெரிவித்த SJசூர்யா,sj suryah about why he produced bommai movie | Galatta

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனர் ராதா மோகனின் பொம்மை திரைப்படத்தை தயாரிப்பதற்கான காரணத்தை எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்திருக்கிறார். மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராதா மோகன் பொம்மை படத்தை எழுதி இயக்கியுள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும்  மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் நாளை ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யா அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவரிடம், “பொம்மை என்கிற படத்தில் ஒரு கதாபாத்திரம் வருகிறது. நீங்கள் கதையைக் கேட்ட போது, நீங்கள் முன்பே சொல்லி இருந்தீர்கள் ஸ்கிரிப்ட் படிப்பதை விட கதை கேட்பதையே விரும்புவேன் என்று, அப்படி இயக்குனர் ராதா மோகன் உங்களிடம் கதை சொன்ன போது உங்கள் கண்ணுக்கு முன்னால் கற்பனையில் என்ன நின்றது?” எனக் கேட்டபோது,

“அந்த ராஜ்குமார் என்ற கதாபாத்திரமாக.., இயக்குனர் ராதா மோகன் சார் நன்றாக நடித்து காட்டுவார். கொஞ்சம் நிறுத்தி அதை மீண்டும் பண்ணுங்கள் என்று சொன்னால் பண்ண வராது. அவர் அவரை அறியாமல் அந்த கதையை சொல்லும்போது பின்னி எடுத்து விடுவார். அப்படி அவர் சொன்ன கதையில் முதல் பாதையில் எனக்கு என்ன பிடித்திருந்தது என சொன்னால் ஒரு அற்புதமான காதலின் உணர்வை… ஒரு பொம்மை என்பது... வெளிநாடுகளில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் ஒரு பொம்மையை காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். பொம்மையை கல்யாணமே செய்து கொள்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக கல்யாணம் செய்து கொண்டு பொம்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது ஒரு கிரே ஷேட். அப்படி ஒரு கிரே ஷேட் தன்மை கொண்ட ஒரு கதையை ஒரு அழகான குடும்ப பாங்கான ஒரு காதல், அதில் ஒரு சின்ன த்ரில்லர் வைத்து அவர் ஒரு கதை சொன்னார். அங்கு தான் மொழி மற்றும் அபியும் நானும் படங்களை செதுக்கிய ஒரு சிற்பியின் உடைய பலத்தை நான் பார்த்தேன். அழகாக கதை சொன்னார். பின்னர் இரண்டாவது பாதியில் ஒரு முக்கியமான காட்சி இருக்கிறது. அந்த காட்சியை அவர் விவரித்தவுடன் நான் கைத்தட்டி நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என சொன்னேன். நடிப்பது மட்டுமல்ல இப்படத்தை தயாரிக்கிறேன் என சொன்னேன். இந்தப் படம் உலகம் முழுக்க சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றேன். எனவே இன்னும் ஒரு அடி முன்னால் சென்று பொம்மை படத்தை தயாரிக்க முடிவெடுத்தேன்.” 

என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

கதையே கேட்காமல் நடிப்பேன்!- பிரியா பவானி சங்கரின் ஃபேவரட் இயக்குனர்கள்... காரணம் என்ன? வைரல் வீடியோ இதோ
சினிமா

கதையே கேட்காமல் நடிப்பேன்!- பிரியா பவானி சங்கரின் ஃபேவரட் இயக்குனர்கள்... காரணம் என்ன? வைரல் வீடியோ இதோ

சினிமா

"இது என்ன பண்ணக்கூடாத காரியமா?"- காதலை வெளிப்படையாக தெரிவித்தது பற்றி பிரியா பவானி சங்கரின் செம்ம பதில்! வீடியோ இதோ

பிச்சைக்காரன் 2க்கு பின், இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த முக்கிய படம்... தயாரிப்பாளரின் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

பிச்சைக்காரன் 2க்கு பின், இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த முக்கிய படம்... தயாரிப்பாளரின் அசத்தலான அறிவிப்பு இதோ!