"WILD CARDல கூப்பிட்டா போகாதீங்க!"- பிரதீப் ஆண்டனிக்கு அட்வைஸ் கொடுத்த பாடகி சுசித்ரா... விசித்ரா & VJ அர்ச்சனாவுக்கு பாராட்டு! வைரல் வீடியோ

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப் ஆன்டனிக்கு சுசித்ரா அட்வைஸ்,singer suchithra advices pradeep antony and appreciates vichithra | Galatta

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் RED CARD கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் கிட்டத்தட்ட பிரதீப் ஆண்டனிக்கு எதிராக திரும்பியது போலவே இருந்தது. ஒரு சிலரை தவிர மற்ற எல்லோரும் உள்ளுக்குள் ஏதோ ஒரு வன்மத்தை வைத்து கொண்டே பிரதீப் ஆண்டனியை திட்டமிட்டு வெளியேற்றியதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு மோசமான விமர்சனம் பிரதீப் ஆண்டனியின் மொத்த கரியரையும் காலி செய்யும் வகையில், இருப்பதாக வீட்டுக்குள் இருக்கும் விசித்திராவும் VJ.அர்ச்சனாவும் மற்ற போட்டியாளர்களோடு விவாதம் செய்து வருகின்றனர். பிரதீப் ஆண்டனி வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு ஆதரவாக வீட்டுக்குள் பேசி வரும் விசித்ரா மற்றும் VJ அர்ச்சனா இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு தெரிவிக்கிறது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த பிரபல பாடகியும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான பாடகி சுசித்ரா இது குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்,

“பிக் பாஸில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் #UNFAIR என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நீங்களும் உங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறீர்கள். இப்போது நீங்கள் பிரதீப் ஆண்டனிக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?” என கேட்டபோது, “பிரதீப் பிரதர் மீண்டும் உங்களை வைல்ட் கார்டில் அழைத்தால் தயவு செய்து போகாதீர்கள். ஏதாவது கிரவுட் ஃபண்டிங் செய்து சுவிட்சர்லாந்து போய் ஜாலியாக மூன்று வருடம் இருந்து விட்டு வாருங்கள். அதற்கு முன்பு ஒரு முறை சபரிமலை போய் வாருங்கள். அங்கே ஒரு கடவுள் இருக்கிறது. உங்களுக்கு சிறு வயதில் என்ன நடந்ததோ எந்த ஒரு மனோதத்துவ நிபுணரிடமும் அதற்கு பதில் இருக்காது. சாமியே அதை குணப்படுத்தி விடுவார். என சபரிமலைக்கு போக சொல்வேன்” என தெரிவித்தார். 

தொடர்ந்து அவரிடம், “ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேறிய பிறகு வீட்டுக்குள் ஒரு உரையாடல் நடந்தது அதில் விசித்ரா அவர்கள் "ஒருவருடைய வாழ்க்கையை எதற்காக இப்படி அழைத்து அனுப்புகிறீர்கள்" கேட்கிறார்”. என கேட்டபோது, " பெண்களின் பக்கம் நிற்காமல் பேசிய விசித்ரா அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும் அந்த இடத்தில் யாராக இருந்தாலும் தானாகவே பெண்களின் பக்கம் தான் போவார்கள் .ஆனால் விசித்ரா மற்றும் அர்ச்சனா இருவருமே இவர் (பிரதீப் ஆண்டனி) பக்கம் நின்றார்கள். இவர்கள் இருவருக்கும் நீங்கள் கோவில் கட்டி கும்பிடலாம் அவர்களைப் போலவே இன்னும் நூறு ஆயிரம் பேர் வெளியில் இருக்கிறார்கள் என பார்க்கும்போது இன்னும் நல்லவைகள் இருக்கிறது இந்த உலகத்தில் என ஒரு நம்பிக்கை வருகிறது.” எனவும் தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட சுசித்ரா அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.