தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிலம்பரசன்.TR நடித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரிலீஸான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில், வெற்றிக் கூட்டணியான சிலம்பரசன்TR - கௌதம் வாசுதேவ் மேனன் - AR ரஹ்மான் கூட்டணியில் 3வது படமாக வெந்து தணிந்தது காடு வெளியானது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் அவர்கள் தயாரித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் AGR எனும் மிரட்டலான கதாப்பாத்திரத்தில் சிலம்பரசன்.TR நடித்து வருகிறார். சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நமது கலாட்டா ப்ளஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்தும், சினிமா மற்றும் தனது திரையுலக அனுபவங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நடிகர் சிலம்பரசன்.TR.

அந்த வகையில் தனது இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில்  சிலம்பாட்டம் திரைப்படத்தின் அப்பா கதாபாத்திரமும் தொட்டி ஜெயா திரைப்படத்தின் ரவுடி கதாபாத்திரமும் சவாலான கதாபாத்திரங்களாக இருந்தன என்றும், அந்த கதாபாத்திரங்களுக்காக என்னை நான் தயார்படுத்திக் கொள்வதும், ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக நடிப்பதும் மிக சவாலாக அமைந்ததாக விவரமாக தெரிவித்துள்ளார். நடிகர் சிலம்பரசன்TR-ன் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.