இந்திய திரை உலகின் ஆகச் சிறந்த இயக்குனராக விளங்கும் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமாக அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளன. 

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் வசனங்கள் எழுதியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 

ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் (எ) பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி, வானதி, ரவிதாஸன், செம்பியன் மாதேவி, சேந்தன் அமுதன், சம்புவரையர் என பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், லால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு, ஷோபித்தா, கிஷோர், ஜெயசித்ரா, அஸ்வின் காக்கமனு, நிழல்கள் ரவி என ஆகியோர் நடித்துள்ளனர்

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தை தற்போது படக்குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அநிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன் ராமன் நடித்துள்ளார். இந்நிலையில் ஆழ்வார்க்கடியானாக ஜெயராமும், அனிருத்த பிரம்மராயராக மோகன் ராமனும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியானது. அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Jayaram (@actorjayaram_official)