"விரோதியை கூட நோகடிக்காத பண்பு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கார் பயணம்!"- மனம் திறந்த பார்த்திபனின் வைரல் கவிதை இதோ!

ரஜினிகாந்த் உடனான கார் பயணம் குறித்து பார்த்திபனின் கவிதை,parthiban special tweet about super star rajinikanth | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் பார்த்திபன். எப்போதும் ஏதாவது புதுமையாக செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு தமிழ் சினிமாவை அணுகும் ஒரு சிலரில் மிக முக்கியமானவராக திகழும் இயக்குனர் பார்த்திபன் அவர்களின் ஒவ்வொரு படைப்புகளும் அதை உரக்கச் சொல்லும். ஒற்றை ஆளாக மொத்த படத்திலும் நடிக்க முடியும் என நிரூபித்து காட்டும் விதமாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு உலக அளவில் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்ததோடு சிறந்த திரைப்படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதாக தேசிய விருதும் வென்றது. மேலும் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்க ஒத்த செருப்பு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மற்றொரு சாதனை முயற்சியாக பார்த்திபன் உருவாக்கிய சிங்கிள் ஷாட் திரைப்படம் இரவின் நிழல். அதுவும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த இரவின் நிழல் திரைப்படமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. முதல்முறையாக பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பிற இயக்குனர்களின் திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் பார்த்திபன் அவர்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சின்ன பழுவேட்டரையர் ஏற்பதா பாத்திரத்தில் நடித்த பார்த்திபன் குறிப்பிட்ட காட்சிகள் என்றாலும் தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு காரில் பயணம் சென்றது குறித்து தனக்கே உரித்தான பாணியில் கவிதையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் அவர்கள் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "மறைந்த Mkt அவர்களைப் பற்றி கேட்டதுண்டு,மறைந்த MGR அவர்களை பார்த்ததுண்டு ஆனால் என் மனம் நிறைந்த ரஜனி சாரோடு நெருங்கிப் பழகுபவன் நான் Super star மட்டுமின்றி super human ஆகவும் அவரை தரிசித்த அன்று -என்னை இறக்கி விட்டுவிட்டு சென்று கொண்டிருந்த அவர் காரை பார்த்தபடி நான் எழுதியக் கவிதை ‘விலக விலக புள்ளிதானே நீ மட்டும் எப்படி விஸ்வரூபம்?’ எனக்கும் அவருக்குமான உறவு அற்புதத்திற்கு அடுத்த பதம்! மறைந்த ஒருவரை நினைவு கூறும் நாளில் அவர் பெருமையை சொல்வது மட்டுமே என் நோக்கம்.எதிர்வினையாக சிந்தித்து பதிவிடும் நண்பர்கள் அவருக்கு புகழ் சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு அருவருப்பாக வார்த்தைகளை பிரயோகப்படுத்தி “அவரது ரசிகர்களா இப்படி” என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள்.நம்ம super star-யிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது “விரோதியைக் கூட நோகடிக்காத அவரது எளிமையான தன்மையான பண்பு!” Good night!!!" என பதிவிட்டுள்ளார். இயக்குனர் பார்த்திபனின் அந்தப் பதிவு இதோ…
 

மறைந்த Mkt அவர்களைப் பற்றி கேட்டதுண்டு,மறைந்த MGR அவர்களை பார்த்ததுண்டு ஆனால் என் மனம் நிறைந்த ரஜனி சாரோடு நெருங்கிப் பழகுபவன் நான் Super star மட்டுமின்றி super human ஆகவும் அவரை தரிசித்த அன்று -என்னை இறக்கி விட்டுவிட்டு சென்று கொண்டிருந்த அவர் காரை பார்த்தபடி நான் எழுதியக் கவிதை pic.twitter.com/FQVVQQ04De

— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 1, 2023

சினிமா

"தலைவி பட நடிகை பூர்ணாவின் வீட்டில் விசேஷம்!"- பாரம்பரிய முறையில் நடந்த வளைகாப்பு... வைரல் புகைப்படங்கள் உள்ளே!

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீர் சந்திப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் இமயம் பாரதிராஜா திடீர் சந்திப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"சர்ப்ரைஸாக வருகிறதா அஜித் குமாரின் AK62 அப்டேட்?"- லைகா ப்ரொடக்ஷன்ஸ் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்!