மாடல் ஆக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரை மற்றும் டிஜிட்டலில் நடிகையாக நடித்து அசத்தி வருபவர் சம்யுத்தா.மாடல் ஆக ஆரம்பித்து போட்டோஷூட்கள் மூலம் பிரபலமான இவர் அடுத்ததாக யூடியூப்பில் நடிகையாக அறிமுகமானார்.

இந்த தொடரில் நடித்து நடிகையாக அடையாளம் பெற்று பெரிய வரவேற்பை பெற்றார் சம்யுத்தா.இந்த தொடரின் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.இந்த தொடரில் கிடைத்த வரவேற்பை அடுத்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த பாவம் கணேசன்,அன்புடன் குஷி,சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து சீரியல் நடிகையாகவும் மக்கள் மனம் கவர்ந்தார் சம்யுத்தா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது சிப்பிக்குள் முத்து தொடரில் உடன் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.விஷ்ணுகாந்த் என்றென்றும் புன்னகை,சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் முடிந்த கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022 விருது விழாவில் மக்களின் மனம் கவர்ந்த Favourite Heroine of Digital என்ற விருதினை இவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கலாட்டா சார்பாக விரைவில் தம்பதிகளாக இருக்கும் விஷ்ணுகாந்த் - சம்யுத்தா இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyutha (@samyutha.official)