சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் கண்மணி மனோகரன்.பிரபல மாடல் ஆக இருந்து விளம்பரப்படங்கள்,குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கண்மணி.அடுத்து விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

முதலில் வில்லி போல ஆரம்பித்த இவரது அஞ்சலி கதாபாத்திரம் பின்னர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியது.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.சில எதிர்பாராத காரணங்களால் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து சமீபத்தில் விலகினார்.

சீரியலில் விலகிய பின் சில நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று அசத்துவார் கண்மணி.ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர் குயின் நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார் கண்மணி.அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் கண்மணி ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது,இதனை தொடர்ந்து பெரிய அறிவிப்பு வராததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.தற்போது இவர் நடித்துள்ள அமுதாவும் அன்னலெட்சுமியும் தொடர் வெகு விரைவில் ஒளிபரப்பாகும் என்று புது ப்ரோமோவுடன் தெரிவித்துள்ளனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்