சுவாரசியமான கதைக்களம் விறுவிறுப்பான திரைக்கதை என முதல் படத்திலேயே முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் லோகேஷ் கனகராஜ்.தனது அடுத்த படத்தில் கார்த்தி போன்ற ஒரு நடிகரை வைத்து அசத்தலாக கைதி என்ற ஆக்ஷன் படத்தினை எடுத்தார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார்,இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை அடுத்து இவர் இயக்கியுள்ள விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

கமல்ஹாசன்,விஜய்சேதுபதி,பஹத் பாசில் என பெரும் நடிகர்கள் இணைந்து நடித்தது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இவர்களுடன் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து அடுத்ததாக லோகேஷ் இயக்கவுள்ள கைதி 2,விக்ரம் 3 படங்களுக்கு லீட் கொடுத்துள்ளார்.

விக்ரம் படத்தில் கைதி படத்தின் கதைக்களமும் இணைவது போல லோகேஷ் கையாண்டுள்ளார்.இதனால் இந்த படத்தில் வந்த ,அடுத்த பாகத்தில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் வந்தனர்.கைதி படத்தில் அடிபட்டு இருந்ததுபோல காட்டப்பட்ட அர்ஜுன்தாஸ் இந்த படத்தில் வந்தது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.நேற்று லோகேஷ் ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

இதில் ரசிகர் ஒருவர் அர்ஜுன்தாஸ் எப்படி விக்ரம் படத்தில் உயிரோடு வந்தார் என்று கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த லோகேஷ் கைதி படத்தில் அவருக்கு அடிபட்டு தான் விழுந்திருப்பார் அதற்கான காயங்களும் படத்தில் லேசாக காட்டப்பட்டிருக்கும்,மேலும் விளக்கமாக கைதி 2 படத்தில் தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.