இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக தனது முதல் திரைப்படத்தில் இருந்து இன்று வரை தனக்கென தனி அடையாளத்தை அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதிலும் பதிய வைத்தவர் நடிகை ஜெனிலியா. தனது துறுதுறுப்பான நடிப்பால் மக்களின் மனதை கொள்ளையடித்த நடிகை ஜெனிலியா இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதனையடுத்து தளபதி விஜய் நடித்த சச்சின் படத்தில் கதாநாயகியாக நடித்த ஜெனிலியா, நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த சமயத்தில் ஹாசினி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியா அனைவருக்கும் ஃபேவரட் ஹீரோயினாக வலம் வந்தார்.

தொடர்ந்து தனுஷின் உத்தமபுத்திரன், தளபதி விஜயின் வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெனிலியா தெலுங்கில் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து தென்னிந்திய திரை உலகின் நட்சத்திர நாயகியாகத் திகழ்ந்தவர். பாலிவுட்டிலும் பல படங்களில் கலக்கிய ஜெனிலியா கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஜெனிலியா அடுத்ததாக தனது தாய்மொழியான மராத்தி மொழியில் முதல்முறை கதாநாயகியாக களமிறங்கயுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தனது கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் முதல்முறை இயக்குனராக களமிறங்கும் வேத் திரைப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் உடன் இணைந்து ஜெனிலியா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

माझा जन्म महाराष्ट्रातलाच.मी अभिनयाला सुरवात केल्यानंतर हिंदी-तमिळ-तेलगू अशा विविध भाषांमधून चित्रपट केले.तिथे रसिक प्रेक्षकांचं उदंड प्रेम मला मिळालं. रितेशच्या पहिल्या दिग्दर्शनाद्वारे मी मराठीत चित्रपटात पदार्पण करतेय. मराठीत काम करतांना मला एक वर्तूळ पूर्ण झाल्यासारखं वाटतंय. pic.twitter.com/bT4bGA4VuE

— Genelia Deshmukh (@geneliad) October 26, 2022