இந்திய திரையுலகில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக, உச்ச நட்சத்திர நாயகராக, கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் கடந்த ஆண்டு (2021) தீபாவளி வெளியீடாக ரிலீஸானது.

இதனையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் அவர்கள் தயாரிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தரமணி & ராக்கி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் வசந்த் ரவி, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த காந்தாரா திரைப்படத்தை பார்த்து ரசித்த ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கே ஜி எஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS தயாரிப்பில் ரிஷப் செட்டி எழுதி இயக்கி நடித்து வெளிவந்த காந்தாரா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் படக்குழுவினரை பாராட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை கீழே உள்ள லிங்கை காணலாம்.
 

“The unknown is more than the known” no one could have said this better in cinema than @hombalefilms #KantaraMovie you gave me goosebumps @shetty_rishab Rishab hats off to you as a writer,director and actor.Congrats to the whole cast and crew of this masterpiece in indian cinema

— Rajinikanth (@rajinikanth) October 26, 2022