பொங்கல் தினத்தையொட்டி நாளை பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் ‘வாரிசு’ படத்தின் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரவேற்க தாயார் நிலையில் உள்ளனர். படத்திற்கான இறுதிகட்ட விளம்பர வேலை ஒருபுறம் நடந்தாலும் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தாயார் நிலையில் உள்ளனர்.  கோலாகலமாக நாளை வெளியாகவிருக்கும் வாரிசு படம் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் அப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அதில் மக்கள் ஒரு படத்தை கதாநாயகனை மையப்படுத்தியே கவனித்து வருவார்கள். அவர் யார், அவரை சுற்றி என்ன நடக்கிறது, அவர் அந்த சூழலை எப்படி கையாளுகிறார் என்பதையே மக்கள் கவனிப்பார்கள். அதே தான் இங்கும். தளபதி விஜயை மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். அவர் மீதே அனைவரின் கவனமும் இருக்கும்,படத்தில் விஜய் என்ன செய்ய போகிறார் என்பதே மக்கள் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதுதான் என் பலமும் கூட..  விஜய் நடிப்பதனால் நான் சொல்ல வரும் கதையை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது.. இந்த படத்தை பொறுத்தவரை வின்டேஜ் விஜய் சாருடைய படமாகவும் இருக்கும் இன்றைய விஜய் சாருடைய படமாகவும் வாரிசு படத்தை நீங்கள் அணுகலாம்.. ” என்று குறிப்பிட்டிருந்தார்.

விஜய் உடன் சரத்குமார், ராஷ்மிகா, ஜெயசுதா, ஷாம், சங்கீதா உள்ளிட்டோர் நடிப்பில் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் விஜயின் வாரிசு பட டிரைலர் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் குடும்பத்துடன் இணைந்த கதாபாத்திரமாக தளபதி விஜய் கதாபாத்திரம் இருப்பதால் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வின்டேஜ் விஜயை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பலரிடம் இருந்த நிலையை அந்த எதிர்பார்ப்பை வாரிசு பூர்த்தி செய்யுமா என்ற கேள்விக்கு நாளை படம் வெளியான பின்பு தான் தெரியும். நிச்சயம் குடும்பங்கள் உணர்வை நேர்த்தியாக விஜயை வைத்து வம்சி கையாண்டிருப்பார் என்று அவரது முந்தைய படங்களை வைத்து நம்பப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.

மேலும் வாரிசு படம் குறித்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பகிர்ந்த முழு வீடியோ இதோ..