பிரபல பாலிவுட் இயக்குனரை நிராகரித்த சியான் விக்ரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு.. – பின்னணி இதோ..

அனுராக் காஷ்யப் உடனான மோதல் சர்ச்சைக்கு விளக்கமளித்த சியான் விக்ரம் - Chiyaan vikram reply anurag kashyap controversies | Galatta

தென்னிந்தியாவில் தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். சேது திரைப்படம் தொடங்கி சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரை சியான் விக்ரம் நடிப்பை இந்திய சினிமாவே பாராட்டி கொண்டாடி வருகிறது. தனகென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் சியான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் ஏற்பட்ட விபத்தில் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சியான் விக்ரம். ஓய்விற்கு பின் தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதனிடையே லைகா தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜிநிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 170’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திற்காக சியான் விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வரும் இயக்குனர் அனுராக் காஷ்யாப். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் மிரட்டியிருப்பார். இவருடைய இயக்கத்தில் சியான் விக்ரம் தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்து முடியவில்லை என்று பேசியுள்ளார். இது தொடர்பாக இணையத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘கென்னடி’  விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், “கென்னடி திரைப்படத்தில் நடிக்க நான் முதலில் தேர்ந்தெடுத்த நடிகர் சியான் விக்ரம். அவரது உண்மையான பெயரான கென்னடி. அதை நினைவில் வைத்து தான் இந்த படத்தை எழுதினேன். இந்த படத்தில் நடிக்க அவரை கேட்க பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் என்னால் அவரை நெருங்க முடியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் அனுராக் காஷ்யாம் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர். அவருடைய தரமான படைப்புக்களுக்கு தமிழ் ரசிகர்களும் ஏராளம். இந்நிலையில் இவரது பட வாய்பை எப்படி சியான் விக்ரம் தவறவிடலாம் என்று ரசிகர்கள் இணையத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பினார். இந்நிலையில் எந்தவொரு விமர்சனத்திற்கு செவி சாய்க்காமல் கடந்து போகும் சியான்  விக்ரம் இந்த சம்பவம் குறித்து சியான் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஒரு வருடத்தில் நமக்குள் நடந்த உரையாடலை நான் இங்கு பதிய விரும்புகிறேன். ஏனென்றால் சமூக வலை தளங்களில் நண்பர்கள் ஆதரவாளர்கள் இது குறித்து கேட்டுக் கொண்டே இருகின்றனர். ஒரு நடிகரின் மூலம் அனுராக் காஷ்யப் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன் நானே உடனே உங்களை அழைத்து உங்களிடமிருந்து எந்த மின்னஞ்சலும் மெசேஜ் வரவில்லை. நீங்கள் தொடர்பு கொண்ட மின்னஞ்சல் கணக்கு தற்போது செயல்பாட்டில் இல்லை அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னரே என் கைப்பேசி எண்ணும் மாறியது. அந்த அழைப்பிலே நான் கென்னடி திரைப்படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். மேலும் அதில் என் பெயரும் இருப்பதால் எனக்கு அதில் மிகுந்த ஆர்வம் என்றும் விளக்கினேன். “ என்று சியான் விக்ரம் தனது தரப்பு விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.இதையடுத்து சியான் விக்ரம் அவர்களின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

Dear @anuragkashyap72 ,
Just revisiting our conversation from over a year ago for the sake of our friends and well wishers on social media. When I heard from another actor that you had tried to reach me for this film & that you felt I hadn’t responded to you, I called you myself…

— Vikram (@chiyaan) May 22, 2023

பின் சியான் விக்ரம் பதிவினை இயக்குனர் அனுராக் கஷ்யப் பகிர்ந்து அதனுடன், “நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை தான் பாஸ் சார்.. கென்னடி படத்தின் கதையை படிப்பதில் சியான் விக்ரம் ஆர்வம் காட்டினார்,  ஆனால் அதற்குள் சில காரணங்களினால் அது நடைபெற முடியாமல் போனது. கென்னடி என்ற பெயரை பயன்படுத்தவும் சியான் விக்ரம் அனுமதி கொடுத்தார் படத்திற்கு ஏன் கென்னடி என்று பெயர் வந்தது என்று பேட்டியில் கேட்கவே நான் அதை கூறினேன்.  இதில் எந்தவொரு சர்ச்சையும் இல்லை. நானும் சியான் விக்ரம் சாரும் ஒன்றாக வேலை பார்க்காமல் ஒய்வு பெற போவதில்லை.” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதையடுத்து சியான் விக்ரம் பதிவுடன் அனுராக் காஷ்யப் பதிவும் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Absolutely right Boss sir. For the information of people, when he found from another actor that I was trying to reach to him he called me directly and we realised that he had a different WhatsApp number. He gave me his correct information to reach out and even showed interest in… https://t.co/1xmImitvHY

— Anurag Kashyap (@anuragkashyap72) May 22, 2023

“மக்களின் நல்லதுக்காக பண்ணிருக்காங்க..” 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி கருத்து.. விவரம் உள்ளே..
சினிமா

“மக்களின் நல்லதுக்காக பண்ணிருக்காங்க..” 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி கருத்து.. விவரம் உள்ளே..

மோகன் லால் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய ஜெயிலர் பட இயக்குனர் – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

மோகன் லால் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய ஜெயிலர் பட இயக்குனர் – வைரலாகும் அட்டகாசமான Glimpse இதோ..

தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

தளபதிக்கு செய்து கொடுத்த Promise.. 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..