ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை அடித்து வரும் ஆகச்சிறந்த நடிகரான சீயான் விக்ரம் அவர்கள், அடுத்ததாக ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா  திரைப்படத்தில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிரட்டலாக நடித்துள்ளா நடிகர் சீயான் விக்ரம், இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு கோடை வெளியீடாக பொன்னியின் செல்வன்-1 ரிலீஸாகவுள்ளது.

இந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன், சனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாக உள்ள மகான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நேற்று (ஜனவரி 30 ஆம் தேதி) மகான் திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் (நாளை) பிப்ரவரி 2ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு  மகான் படத்திலிருந்து அடுத்த பாடலாக போனா போவுரா பாடல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.