தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சீயான் விக்ரம்.கடின உழைப்பால் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் விக்ரம்.இவரது வித்தியாசமான படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.அடுத்ததாக சீயான் விக்ரம் சில முக்கிய படங்களில் நடிக்கவுள்ளார்.இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தின் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாதவர் சீயான் விக்ரம்.இன்ஸ்டாகிராமில் மட்டும் இருக்கும் இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.நேற்று விக்ரம் ட்விட்டரில் இணைந்துள்ளார்.இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் ஒரு 10,15 வருஷம் லேட்டா வந்துட்டேன் இனிமே நிறைய அப்டேட் ட்விட்டர்ல வரும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் ரஞ்சித் படத்திற்காக ரெடி ஆகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ட்விட்டரில் இணைந்துள்ள விக்ரமை தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளோடு வரவேற்று வருகின்றனர்.