சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் கண்மணி மனோகரன்.பிரபல மாடல் ஆக இருந்து விளம்பரப்படங்கள்,குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் கண்மணி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட கண்மணி மனோகரன் அடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

விஜய் டிவியின் செம ஹிட் தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கண்மணி மனோகரன்.முதலில் வில்லி போல ஆரம்பித்த இவரது அஞ்சலி கதாபாத்திரம் பின்னர் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக மாறியது.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.

சில நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று அசத்துவார் கண்மணி.ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கிய சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் கண்மணி.மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரிலும் கண்மணி ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது சீரியலில் ஹீரோயினாக நடிப்பதால் தேதிகள் பிரச்சனை காரணமாக இவர் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.பாரதி கண்ணம்மா தொடரில் கடந்த சில எபிசோடுகளாக இவர் வராமல் இருக்க இவரை மிஸ் செய்வதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

இதில் ஒரு மீமை மேற்கோள் காட்டி விரைவில் ஒரு புது சீரியலில் உங்களை சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.இது இவர் பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகுவதை கிட்டத்தட்ட உறுதிசெய்வது போல ஆகிவிட்டது,இருந்தாலும் இது குறித்த அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்கவேண்டும்.ஏற்கனவே பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து முக்கிய பிரபலங்கள் மாற்றப்பட்ட நிலையில்,கண்மணியும் விலகுவதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

bharathi kannamma kanmani manoharan is said to quit due to new serial