கணவன் மீது  மிளகாய்ப் பொடி தூவிய மனைவி, அவரை கட்டையால் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின்  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் இப்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து உள்ள பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்த 42 வயதான நரேஷ் குமார் என்பவர், மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணம் ஆகி 38 வயதான சசிகலா என்ற மனைவி இருக்கிறார். அத்துடன், இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்த தம்பதிகளின் 3 பிள்ளைகளும் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில் தான், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இப்படியாக, கணவன் - மனைவிக்கு இடையேயான சண்டை நாளுக்கு நாள் தொடரவே, அவரது மனைவி தன் 3 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, அவரது தாயார் வீட்டிற்கு  சென்று உள்ளார்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த நரேஷ் குமார், வேறு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில், அவர் மீண்டும் ராணுவ பணிக்கு சென்று உள்ளார். 

இந்த நிலையில் தான், சில காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு மீண்டும் விடுமுறையில் அவர் ஊருக்கு வந்திருக்கிறார். ஆனால், அப்போதும் தனது மனைவி, அவரது அம்மா வீட்டில் இருந்து வராத நிலையில், மனைவியை தேடி அவரின் தாயார் வீட்டுக்கு நள்ளிரவு நேரத்தில் மது போதையில் அவர் சென்றிருக்கிறார். 

அப்போது, அவர் மனைவியை குடும்பம் நடத்த அவரின் வீட்டுக்கு வருமாறு தனது மனைவியை அவர் அழைத்து உள்ளார். 

அப்போது, கணவன் - மனைவி இடையே மீண்டும் அவர்களுக்குள் சண்டை வந்து உள்ளது. 

அந்த நேரத்தில் கடும் ஆத்திரமடைந்த அவரது மனைவி சசிகலா, வீட்டிலிருந்து மிளகாய் பொடியை எடுத்து வந்து கடும் மது போதையில் இருந்த கணவரின் கண்கள் மற்றும் அவரது உடல் முழுவதும் தூவி, வீசி உள்ளார். 

இதனால், அந்த மது போதையிலும் வலியால் துடித்த அவர், நிலை தடுமாறி கீழே விழவே, அவரை அங்கிருந்த ஒரு கட்டையால் அவரது மனைவி கடுமையாக தாக்கி உள்ளார். 

இதில், பலத்த காயமடைந்த அந்த கணவரை, அவரது வீட்டினர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். 

மேலும், அந்த மது போதையில் இருந்த கணவன் தாக்கியதில், அவரது மனைவி சசிகலாவும் படுகாயம் அடைந்த நிலையில், அதே மருத்துவமனையில் தற்போது சசிகலாவும் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.