காதல் விவகாரத்தில், ஒரு இளைஞனுக்காக இரண்டு கல்லூரி மாணவிகள் மோதிக்கொண்ட நிலையில், இருவரும் தலை முடியை இழுத்துப் பிடித்து நடுரோட்டில் கட்டிப்புரண்ட சண்டைப் போட்ட சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

சென்னையில், அதுவும் அண்ணா நகர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அண்ணா நகர் ரவுண்டானா பேருந்து நிலையத்தில், பேருந்து ஏறுவதற்காக அங்கு ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தனர். 

அப்போது, அதே பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியிடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பட்ட பகலில், நடு ரோட்டில் இரு பெண்களும் முதலில் சாடை மாடயாக திட்டிக்கொண்ட நிலையில், ஒரு கட்டத்தில் இரு பெண்களின் தகராறும் கைகலப்பாக மாறி உள்ளது.

அதன் படி, மாணவி ஒருவர், மற்றொரு மாணவி மீது பாய்ந்து வந்து அந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இப்படியாக மாணவிகள் இருவரும், ஒருவரையொருவர் முடியை  பிடித்துக்கொண்டு, அந்த சாலையின் நடுவே தாக்கி கொண்டனர். இதில், குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு அவரது சில தோழிகள் ஆதரவாக வந்ததாகவும் கூறப்படுகிறது.

மிக முக்கியாக, இந்த இரு மாணவிகளும் சண்டை போடும் போது, “எனது காதலனுடன் நீ ஏன் பேசுகிறாய்?” என்று, கேட்டுக்கொண்டே இரு மாணவிகளும் தாக்கி கொண்டதாகவும், கூறப்படுகிறது. 

இப்படியாக, இரு மாணவிகள் அடித்து கொள்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நின்ற இளைஞர் ஒருவர், அந்த மாணவிகளின் கூட்டத்திற்குள் புகுந்து அந்த சண்டையை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

அத்துடன், மாணவிகள் இருவரும் அங்கு சண்டை போட்டுக்கொண்டிருந்ததை, அங்கு நின்றுக்கொண்டு இருந்த மாணவர்களில் சிலர், தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோவானது, இணையத்தில் பெரும் வைரலன நிலையில், இது குறித்து சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தரப்பில் யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதே போல், கடந்த டிசம்பர் மாதம் பள்ளி மாணவிகள் கோஷ்டி மோதலில் ஆவடி பேருந்து நிலையத்தில் மோதி கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவிகள் ஒரு காதலனுக்கா நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு மல்லுக்கட்டியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.