மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து திமுக எம்.பி ஆ.ராசா அவர்கள் அவதூறாக பேசி இருக்கிறார், அவருடன் ஜெயலலிதாவின் வழக்கு குறித்து விவாதிக்க தான் தயாராக இருப்பதாக ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.


கடந்தவாரம் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி , ‘’  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க” எனத் தெரிவித்திருந்தார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்.பி ஆ.ராசா அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஊழல் குற்றசாட்டுகள் குறித்து நேரடியாக விவாதிக்க தயாராக இருப்பதாகவும், ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஒருவாரத்தில் எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க எடப்பாடி தயாரா? மேலும் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா? எனக் கேள்வி எம்.பி ஆ.ராசா எழுப்பியிருந்தார்.


இதனை தொடர்ந்து தற்பொழுது, ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோதி , ஆ.ராசாவுடன் விவாதிக்க தயாரக இருக்கிறேன் என்றியிருக்கிறார். மேலும் அவர் கூறியது, “ ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார். ஜெயலலிதாவுக்காக 11 வழக்குகளில் நான் வாதாடியுள்ளேன். அதன் பின் நானாக வழக்கில் இருந்து வெளியேறவில்லை. வெறியேற்றப்பட்டேன்!


ஆ.ராசா சொன்னது போல்  ஜெயலலிதா கொள்ளைக்காரி, அரசியலமைப்பு சட்டத்தை மீறியவர் என்றோ நீதிமன்றம் தீர்ப்பில் எந்த இடத்திலும் இல்லை. பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர்.


 ஜெயலலிதா இறந்தவுடன் நீதிமன்றத்தில் வழக்கை நடத்த வேண்டாம் என ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை,  அதிமுக தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க  வேண்டும். ஆனால் சசிகலா முதலமைச்சர் ஆக முன்னேற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதனால் அவர்கள் அதை தாக்கல் செய்யவில்லை. இதில் சசிகலாவின் சுயலாபம் நிறைந்திருக்கிறது. சசிகலா மட்டும் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் ஜெயலலிதா பெயரே வந்திருக்காது. ஜெயலலிதாவின் வழக்கு பற்றி எனக்கு நன்றாக தெரியும் எனவே ஆ.ராசாவுடன் , அவர் சொல்லும் இடத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறேன்“ என்று கூறியிருக்கிறார்.