பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யாவின் நடிப்பில், இரண்டு அதிரடி திரைப்படங்கள் ஆயுதபூஜை வெளியீடாக ஒரே நாளில் வெளிவருகிறது.

அரிமா நம்பி & இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியுள்ள எனிமி திரைப்படம் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகிறது. அதேநாளில் ஆர்யாவின் மற்றொரு திரைப்படமான அரண்மனை-3 படமும் வெளியாகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சுந்தர்.சி.-ன் திரைப்படங்களுக்கு என்று எப்போதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை சீரிஸ் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதையடுத்து வெளிவருகிறது சுந்தர்.சி-யின் அரண்மனை-3.

இயக்குநர் சுந்தர்.சி  இயக்கத்தில், அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பில், அரண்மனை-3 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, ராஷி கண்ணா & ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்,சாக்ஷி அகர்வால், மைனா நந்தினி, மனோபாலா, நளினி, வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் சி.சத்யா இசையில், U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் அரண்மனை-3 படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் தற்போது அரண்மனை-3 படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியானது. ரசிகர்களுக்கு திரை விருந்தாக வர இருக்கும் அரண்மனை-3 படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.