விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வந்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து சில காரணங்களால் இந்த தொடர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த தொடரின் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ்.தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.

இவரது திருமணம் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.தற்போது இவர் நடிக்கும் புதிய தொடரின் ப்ரோமோ வீடீயோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரின் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.