தம்பி மாதிரி நினைத்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து, இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள எட்டா என்னும் மாவட்டத்தில், 16 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அத்துடன், இந்த 16 வயதான சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.

அதே நேரத்தில், இந்த 16 வயதான சிறுமி குடியிருக்கும் வீடு அருகே தன்னுடன் ஒரு வயது குறைவான ஒரு சிறுவனும், இந்த பெண் படிக்கும் அதே பள்ளியில் படித்து வந்திருக்கிறார்.

அந்த சிறுவன், இந்த பெண்ணை “அக்கா.. அக்கா” என்று அழைத்து வந்த நிலையில், அந்த பெண்ணும், இந்த சிறுவனை “தம்பி” என்றே அழைத்து பேசி பழகி வந்திருக்கிறார்.

இப்படியான சூழலில், அந்த சிறுவனின் மற்ற இரு நண்பர்கள் இந்த சிறுவனை பார்க்க அடிக்கடி அவனது வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்து உள்ளனர்.

இப்படியாக, 3 சிறுவர்கள் ஒன்று சேரும் போதெல்லாம், அந்த பக்கத்து வீட்டு பெண்ணான அந்த 16 வயது சிறுமி பற்றி பேசுவதும், அந்த பெண்ணின் மீது ஈர்ப்பு இருப்பது பற்றியும் பேசி வந்திருக்கிறார்கள்.

இப்படியான சூழல் நிலையில் தான், அந்த 16 வயதான பெண் கடந்த 7 ஆம் தேதி அன்று, தனது வீட்டின் அருகே உள்ள வயலுக்கு சென்றிருக்கிறார்.

அந்த தருணத்தில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்த சிறுவன், தன்னுடைய 2 நண்பர்களை அழைத்து கொண்டு அந்த பெண்ணைப் பின் தொடர்ந்து வயலுக்கு சென்று உள்ளனர். 

அதன் பிறகு, அந்த வயல் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாத நிலையில், சிறுவர்களான 3 நண்பர்களும் சேர்ந்து, அந்த 16 வயதான பெண்னை தாக்கி, அங்கிருந்து இன்னும் தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று உள்ளனர். 

இந்த 3 பேரின் தாக்குதலிலும் சற்று நிலை குலைந்து போன அந்த பெண்ணை, அவர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

இப்படியாக, இந்த பெண்ணை 3 பேரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து அவர்கள் 3 பேரும் தப்பித்து ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணும் நடக்க முடியாமல் நடந்து வீட்டிற்கு வந்த சேர்ந்த நிலையில், “பக்கத்து வீட்டு சிறுவன் மற்றும் அவனது நண்பர்கள் மூலமாக தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை” கூறி, அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 3 பேரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த அந்த 3 பேரும், தற்போது தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து, அவர்களை தேடும் பணியை போலீசா் தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.