“கானா நாட்டின் எப்புடுவுடன் கலாசார உறவு மேம்படுத்தப்பட உள்ளதாக” நித்யானந்தா கூறி உள்ளது, “கைலாசா நாடு எங்கு இருக்கிறது?” என்ற கேள்விக்கான பதில் கிடைத்துள்ளதாக பலரும் கூறிவருகின்றனர்.

“இந்துக்களுக்காக தனி நாடு ஒன்றை உருவாக்குவதாக” கூறிய நித்தியானந்தா, உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்தியானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வந்தார்.

இந்த சூழலில் தான், “கொரோனா காலத்திற்கு பிறகு, முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாகவும்” சமீபத்தில் அங்கிருந்து தப்பித்து வந்த ஒரு சீடர் கூறியிருந்த நிலையில், இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல், படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன், “நித்தியானந்தா உயிரோடுதான் இருக்கிறாரா? அல்லது கோமாவில் இருக்கிறாரா?” என்று, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

அதன் தொடர்ச்சியாக, கைலாசாவில் நித்தியின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, குறு பூஜை நடத்தப்பட்டது தொடர்பான செய்திகளும் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், பக்கதர்கள் பலரும் குழப்பம் அடைந்தனர்.

இந்த நிலையில் தான், மத்திய ஆப்பிரிக்க நாடான கானாவில் இருக்கும் எப்புடு என்ற மாவட்டத்துடன் கைலாசா, இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கான தொடக்க நிலையில் இருப்பதாக அறிவித்து உள்ளது. 

இது குறித்து கைலாசா தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

அந்த பதிவில், “பழமையான கலாச்சாரம், இந்துக்களுக்கான முதல் நாடாக கைலாசா புரிதல், மத சுதந்திரம் மற்றும் மற்ற உரிமைகள், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாக” கூறி உள்ளது.

“கைலாசா, இது வரை எங்கு இருக்கிறதா?” என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கானா நாட்டின் எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க இருப்பதால், விரைவில் கைலாசா கானா நாட்டின் அருகிலேயே அமைந்து உள்ளது ஏரக்குறைய தற்போது உறுதியாகி உள்ளது. 

மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிக விரைவில் வெளியாகலாம் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.

இதனிடையே, “கைலாசா நாட்டிற்கு என்று பாஸ்போர்ட், கைலாசாவிற்கு என்று நாணயம் என்று பலவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு நித்யானந்தா அவரது சீடர்களை குஷிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.