மின்சார ரெயிலில் இளம்பெண் முன் சுயஇன்ப செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

மின்சார ரெயிலில் இளம்பெண் முன் சுயஇன்ப செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது! - Daily news

சென்னை மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபரை போலீசார்  கைது செய்தனர்.

teenager

சென்னை புறநகர் ரயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் தனியாகப் பயணிக்கும் பெண்களிடையே அத்துமீறுவது, பாலியல் வன்கொடுமை செய்வது என வாரந்தோறும் ஏதோ ஒரு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கென பிரத்யேக பெட்டியில் ஏறி இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்ததே அந்த அதிர்ச்சிக்கு காரணம். 

இந்நிலையில் பேருந்துகள், ரயில்கள், பொது இடங்களில் இவ்வாறு சுய இன்பம் காண்பது, பெண்களை உரசிக்கொண்டே இன்பம் காண்பது போன்ற இழிசெயல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 9-ம் தேதி மண்ணிவாக்கத்தை சேர்ந்த ரேணுகா நமது கலாட்டா யூடியூபர் பணியை முடித்துவிட்டு இரவு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். அவருடன் மேலும் இரு பெண்கள் இருந்துள்ளனர். அப்போது மீனம்பாக்கத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறியிருக்கிறார். 

அதனைத்தொடர்ந்து ஆரம்பத்தில் இதனை கண்டுகொள்ளாமல் அப்பெண்கள் விட்டுவிட்டார்கள். ஆனால் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த ஆபாசமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார் அந்த இளைஞர். முதலில் அமர்ந்துகொண்டு சுய இன்பம் செய்துள்ளார். பின்னர் ரேணுகா முன்னாலேயே எழுந்து நின்று செய்தபோது தான் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். உடனே செல்போனில் வீடியோ எடுக்கவே, பதறியடித்து அந்த இளைஞர் ஓட்டம் பிடித்திருக்கிறார். ரேணுகா வசைபாடவே இளைஞர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன்பே இறங்கி தலை தெறித்து ஓடியுள்ளார்.

மேலும் ரேணுகா இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்  தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ரயிலில் பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்த நபரை தேடி வந்தனர். இதையடுத்து மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.  லட்சுமணன் ரயிலில் பெண்கள் முன் ஆபாசமான நடந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Leave a Comment