பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், “சாட்சிகளை கலைத்ததாக நடிகர் திலீப்பினின் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி” பாதிக்கப்பட்ட நடிகை பார் கவுன்சிலில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் பிரபல மலையாள நடிகையை,  நடிகர் திலீப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கின் விசாரணையானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில், “பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த போது எடுக்கப்பட்ட காட்சிகள் யாவும் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியதாகவும்” தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப், அவரது தம்பி, தங்கையின் கணவர் உள்பட 6 பேர் மீது குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

“சதித்திட்டம் தீட்டியது குறித்த விவரங்களை திரட்டுவதற்காக நடிகர் திலீப், அவரது தம்பி, தங்கை கணவரின் செல்போன்களை பரிசோதிக்க வேண்டும்” என்றும், கேரள குற்றப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் கூறினர். 

இதையடுத்து, அவர்கள் 3 பேரும் பயன்படுத்திய 6 செல்போன்களும் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த செல்போன்கள் அனைத்தம், அதன் பிறகு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தடயவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

அங்கு, நடத்தப்பட்ட பரிசோதனை முடிவின் படி, அதன் அறிக்கையை குற்றப் பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

அதன் படி, “நடிகர் திலீப் தன்னுடைய செல்போன்களில் உள்ள முக்கிய விவரங்களை அழித்து விட்டார் என்றும், அதற்கு அவரது வழக்கறிஞர் உதவி செய்தனர்” என்றும் போலீசார், கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தான், நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளைக்கு எதிராக பாதிக்கப்பட்ட நடிகை, அங்குள்ள எர்ணாகுளம் பார் கவுன்சிலில் ஒரு பரபரப்பான புகார் ஒன்றையும் அளித்து உள்ளார்.

அந்த புகார் மனுவில், “நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளை, இந்த வழக்கில் பல சாட்சிகளை கலைத்து உள்ளார் என்றும், இந்த வழக்கின் விசாரணையின் தொடக்க கட்டத்தில் எனக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் தற்போது பல்டி அடித்ததற்கு ராமன் பிள்ளையின் தலையீடு தான் மிக முக்கிய காரணமாம் என்றும், அவரும் அவரது உதவியாளர்களும் பல சாட்சிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளனர்” என்றும், அந்த நடிகை பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

மேலும், “பணம் வாங்காதவர்களை இவர்கள் மிரட்டி உள்ளனர் என்றும், சாட்சிகளை எதிர்தரப்பு வழக்கறிஞர் எந்த காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாது என்று, விதிமுறை இருக்கும் போது அதை மீறி ராமன் பிள்ளை இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்” என்றும், அவர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

அத்துடன், “நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்த விவரங்களை அழிப்பதற்கும், அவரது வழக்கறிஞர் உதவி செய்து உள்ளார் என்றும், இவை வழக்கறிஞர் தொழில் சட்டத்துக்கு எதிரானது என்றும், இதனால் நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளை மீது பார் கவுன்சில் மகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், பாதிக்கப்பட்ட நடிகை புகார் மனுவில் வலியுறுத்தி உள்ளார். இதனால், இந்த வழக்கில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.