உலகளாவிய காற்று மாசுபாட்டிற்கு சீனா, ரஷியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வடகரோலினாவில் நடந்த அதிபர் தேர்தல் பரப்புரையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய அவர்  சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளை உலகளாவிய காற்று மாசுபாட்டிற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் அமெரிக்காவில் சிறந்த சுற்றுச்சூழல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா அதன் சுதந்திரமான சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் எரிசக்தி ஆற்றல் சுதந்திரத்தை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபராக மீண்டும் அதிபர் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர்.

அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் கொரோனாவில் ட்ரம்ப் பாதிக்கப்பட்டு 10 நாட்களாக பிரச்சாரம் ஏதும் செய்யாமல் இருந்தார். தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் தனது பிரச்சாரத்தை அதிபர் ட்ரம்ப் தொடங்கியுள்ளார். நார்த் கரோலினாவில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், உலகில் காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

காலநிலை மாற்றத்தை தவிர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பாரீஸ் பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்திலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா வெளியேறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு எதிராக செயல்பட அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்க்கு வாக்களிக்க வேண்டாம் என ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கடந்த சில நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்ப் பேசிய கருத்துகள் பின்வருமாறு : ``என் மக்களே! நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். உங்களுக்கு அது தெரிந்திருக்கும். உலக அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள்தான் காரணம். காற்றில் அதிகமான அளவு மாசடைந்த வாயுக்களை இந்த நாடுகள்தான் வெளியேற்றுகின்றன.

ஆனால், அமெரிக்காவைப் பொறுத்தவரை குறைந்த அளவுதான் காற்றில் மாசு வாயுவைக் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிளாஸ்டிக்குக்குப் பதிலாக காகிதத்தை மாற்றுப் பொருளாக மாற்ற முடியும் என்று நினைக்கவில்லை. குளிர்பானம் குடிக்கும் ஸ்ட்ராவுக்குப் பதிலாக காகிதத்தில் குடிக்க முடியுமா? அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

டென்னஸி நகரில் ஒரு நிறுவனத்தின் தலைவர் அமெரிக்கப் பணியாளர்களை மாற்றி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தினார். அந்த நிறுவனத்தின் தலைமைக்கு நான்விடுத்த எச்சரிக்கைக்குப் பின், மீண்டும் அமெரிக்க மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்''

இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார.