நடிகை குஷ்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

``என்னை எதிர்கொள்ள வி,சி.க.விற்கு திராணி இல்லை. என்னை கண்டு பயந்து விட்டனர். எனவேதான் எங்களது போராட்டத்தை திட்டமிட்டு சீர் குலைத்தனர். தற்போது டாக்டர் அம்பேத்கர் எழுதிய சட்டத்தின்படிதான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே தற்போதைய ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவது சரியல்ல. தேர்தல் வருவதால் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக மட்டுமே விடுதலை சிறுத்தைகள் இப்படி செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் பா.ஜ.க.வை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் இதை நிரூபித்து காட்டுவோம். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார். அவருக்கு எதிராக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலை எதுவும் இல்லை. இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆட்சி நன்றாகவே நடக்கிறது. அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்.  வெற்றி பெறுவோம். மத்திய அரசு திட்டங்களை காங்கிரஸ் எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளது.  பா.ஜ.க.வை தமிழகத்தின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

திருமாவளவனின் கருத்தை கண்டித்து சிதம்பரத்துக்கே சென்று நான் போராட்டம் நடத்தினால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் நினைத்தனர். எனவேதான் என்னை தடுத்து நிறுத்தினார்கள்.

பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக திருமாவளவன் சொல்லும் மனு தர்ம நூல் சுமார் 3700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகும். அதன் பிறகு அதனுடைய சாரம்சங்களை நிறைய பேர் எழுதியுள்ளனர். தங்களது விருப்பத்துக்கு ஏற்பகூட அது மாற்றி எழுதப்பட்டிருக்கலாம்.

பழைய மனு தர்ம நூலில் பெண்களுக்கு எதிராக எழுதப்பட்டிருப்பதாக சில வரிகளை சொல்கிறார்கள். அந்த வரிகளை பிடித்து கொண்டு அரசியல் செய்வதால் என்ன சாதனை படைத்து விட முடியும். அந்த வரிகள் மூலம் நீங்கள் எதை நிரூபித்து காட்ட முடியும். தேர்தல் வருவதால் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக மட்டுமே விடுதலை சிறுத்தைகள் இப்படி செயல்படுகிறார்கள்.

பெண்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் அடுத்த நிமிடமே அனைவரும் உங்களுக்கு மரியாதை கொடுக்க தொடங்கி விடுவார்கள். நீங்கள் பா.ஜனதாவை இழிவுபடுத்தவில்லை. இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் இழிவு படுத்தி உள்ளீர்கள்.

உண்மையில் மனு தர்ம புத்தகத்தில் பெண்களை புகழ்ந்துதான் சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று அந்த புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமாவளவன் இதையெல்லாம் சொல்லாமல் தேவையில்லாததை மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாங்கள் இதை நிரூபித்து காட்டுவோம். அந்த தேர்தல் ஒவ்வொருவருக்கும் வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் பெரிய தலைவர்களை இழந்து முதல் முதலாக மிகப்பெரிய தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அ.தி.மு.க.வை பொறுத்த வரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலை எதுவும் இல்லை.

இந்த ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆட்சி நன்றாகவே நடக்கிறது. அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். மீண்டும் வெற்றி பெறுவோம்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதை காங்கிரஸ் எதிர்ப்பது ஆச்சரியமாக உள்ளது. முத்தலாக் சட்டம் கொண்டு வந்திருப்பதன் மூலம் சிறுபாண்மை பெண்களை மத்திய அரசு காப்பாற்றி உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போல அடுத்து அங்கு மசூதியும் கட்ட இருக்கிறார்கள். காஷ்மீரில் இரண்டு கொடிகள் என்பது ஏற்புடையது அல்ல. ஒரே நாட்டில் ஏன் இரு வேறு கொடிகள் இருக்க வேண்டும்.

ராகுல்காந்தி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் மேலும் பல தோல்விகளை சந்திக்கும். ராகுல் தன்னை சுற்றி இருக்கும் கோட்டை உடைத்துவிட்டு வெளியில் வர வேண்டும். பா.ஜனதாவில் எனக்கு இன்னும் எந்த பொறுப்பும் தராவிட்டாலும், கட்சியை தமிழகத்தின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம் ஆகும்.

பா.ஜனதா இந்துக்களுக்கு மட்டுமே உரிய கட்சி என்ற பிம்பத்தை நான் உடைத்து காட்டுவேன்"

இவ்வாறு அவர் கூறினார்.