“எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. ஆனாலும், எங்கள இப்படி தான் சீரழித்தான்” என்று, நாகர்கோவில் காசி வழக்கில் பாதிக்கப்பட்ட திருமணமான பெண்கள் பல பகீர் தகவல்களை வாக்கு மூலமாக அளித்துள்ள உள்ளனர். 

பெண் டாக்டர் உள்பட சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடக்கத்தில், மன்தமன் காசியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தற்போது வரை வெளியாகி வருகின்றன. 

இந்த வழக்கில் காசியின் நணபன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. இதனையடுத்து, அவனும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டான். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.

கடந்த வாரம் “பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காசி மீது சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி கடந்த வாரம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். சிபிசிஐடி போலீசாரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், காசியின் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த தகவலின் படி, பெண்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி, ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது போன்ற உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி, காசி தான் அணிந்திருக்கும் கை கடிகாரத்தில் உள்ள கேமராவை பயன்படுத்தி, பல பெண்களைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பேராசிரியை ஒருவரும் காசியின் வலையில் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும், காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன. இதில் பல எண்கள் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசியின் தொடர்பிலிருந்த செல்போன் எண்களில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல அதிர்ச்சி தகவல்களை அந்த பெண்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை பெரும்பாலும் காரில் வைத்தே காசி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது வாழ்க்கையை சீரழித்துள்ள விசயமும் போலீசாரின் விசாரணையில் தற்போது ஒவ்வொன்றாகத் தெரிய வந்துள்ளது.

காசியிடம் இருந்த பெரும்பாலான ஆபாச வீடியோகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் காசியுடன் சேர்ந்து இருப்பது போல் இல்லாமல், அவர்கள் பெரும்பாலும் காசியின் வற்புறுத்தலுக்கு இணங்கவே, தாங்கள் தங்களையே ஆபாசமாக வீடியோ எடுத்து காசிக்கு அனுப்பிவைத்து உள்ளதும், இதையே தன்னுடைய ஆயுதமாக வைத்துக்கொண்டு காசி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததோடு, அவர்களை மிரட்டியே பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டதும் தெரிய வந்திருக்கிறது.

காசி தொடர்பான வீடியோகளில் உள்ளவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிப்பது தொடர்பாகக் காசியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, காசியில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரைத் தொடர்பு கொண்ட சிபிசிஐடி போலீசார், தைரியமாகப் புகார் கொடுக்குமாறு கூறி வருகிறார்கள். எனினும், பல பெண்கள் எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், அதனால் புகார் எதுவும் வேண்டாம் என்றும் போலீசாரிடம் கதறி அழுது வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன. இதனால், காசி வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. 

மன்மதன் நாகர்கோவில் காசி வழக்கில் இனி மேல் தான் பல அதிரடி திருப்பங்கள் இருக்கும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.