நாள்தோறும் இந்தியாவில் 87 பாலியல் வழக்குகள்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு! தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவல்..

நாள்தோறும் இந்தியாவில் 87 பாலியல் வழக்குகள்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 7 சதவீதம் அதிகரிப்பு! தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவல்.. - Daily news

இந்தியாவில் நாள்தோறும் 87 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்பைவிட தற்போது 7 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியது முதல் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புதிய புள்ளி விபரங்களைத் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

குறிப்பாக, ஆண்டுக்கு மிகச் சரியாக 4,05,861 பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகி இருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் கூறியுள்ளது. இந்த குற்றங்கள், கடந்த 2018 ஆம் ஆண்டை விட 7 சதவீதத்திற்கும் மேலானது என்றும், தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி ஊட்டும் தகவலை தெரிவித்து இருக்கிறது. 

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம், நாடு முழுவதும் இருந்து குற்றத் தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதில், 36 மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்கள் மற்றும் 53 பெரு நகரங்களில் இருந்து இது தொடர்பான தரவுகளை சேகரித்து, அதை 3 தொகுதி அறிக்கையாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் வெளியிட்டுள்ள “இந்தியாவில் குற்றங்கள் - 2019” என்ற அறிக்கையில், கடந்த ஆண்டை விட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகச் சரியாக 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், பெண்கள் தொடர்பான குற்ற விகிதம் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 62.4 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டு உள்ளது. இது எண்ணிக்கையானது கடந்த 2018 ஆம் ஆண்டின் 58.8 சதவீதமாக மட்டுமே இருந்தது. அது, கடந்த ஆண்டு முன்பைவிட அதிகரித்து இருக்கிறது.

குறிப்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,236 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த குற்ற வழக்குகளானது, கடந்த 2017 ஆம் ஆண்டில் 32,559 ஆக மட்டுமே பதிவாகி இருந்திருக்கிறது. தற்போது, கடந்த 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861  குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

அதே போல், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலும் கணவர் அல்லது அவரது உறவினர்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமை என்றும், இது புள்ளி விபரங்களில் பார்க்கையில் 30.9 சதவீதம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், பெண்கள் மீதான தாக்குதல் சம்பவமானது 21.8 சதவீதமாகவும், பெண்கள் கடத்தல் தொடர்பான வழக்குகள் 17.9 சதவீதமாகவும், என்.சி.ஆர்.பி. தரவு, தனது புள்ளி விபரங்களில் சுட்டிக்காட்டி உள்ளது. 

அதே நேரத்தில், பெண்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.  

முக்கியமாக, கடந்த 2018 ஆண்டை விட கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துக் காணப்பட்டு உள்ளன. 

அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தைகள் மீதான மொத்த குற்றங்களானது சுமார் 1.48 லட்சம் அளவுக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றும், இவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் பலாத்கார குற்ற வழக்குகள் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மேற்கு வங்கம் மாநிலம் மட்டும் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான குற்ற விபரங்களைப் பகிரவில்லை என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான இந்த புள்ளி விபரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment