குறட்டை விட்டு தூங்கிய காவலாளியின் மனைவியை, திருட வந்தவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்த 30 வயதான கிருஷ்ணன் பகதூர், அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள தனி அறையில், தன் மனைவியுடன் வசித்து வந்தார்.

Chennai woman sexual assault husband sleeps

இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணன் பகதூர், இரவில் அடுக்குமாடி குடியிருப்பைக் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர், நள்ளிரவு நேரத்தில், கீழே உள்ள தனது அறையிலேயே குறட்டைவிட்டு தூங்கி உள்ளார்.

அந்த நேரம் பார்த்து அங்கு திருட வந்த திருடன் ஒருவன், திருடுவதற்கு எதுவும் கிடைக்காத விரக்தியில், மொட்டைமாடிக்கு சென்றுள்ளார். அங்கு கிருஷ்ணன் பகதூரின் மனைவி மட்டும் வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

Chennai woman sexual assault husband sleeps

அவரிடம், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், அவர் சத்தம்போட்டுக் கூச்சலிடவே, திருடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளான்.

இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அலங்கோலத்துடன், கீழே வந்த காவலாளியின் மனைவி, தூங்கிக்கொண்டிருந்த கணவனை எழுப்பி, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து, அழுதுகொண்டே கூறியுள்ளார்.

Chennai woman sexual assault husband sleeps

இதனால், பதறிப்போன காவலாளி கிருஷ்ணன் பகதூர்,  திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

அதில், அந்த திருடன் அங்கும், அங்கும் செல்லும் காட்சிகள் அப்படியே பதிவாகியிருந்தது. அதன்படி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அமைந்தகரையைச் சேர்ந்த 22 வயதான ராமகிருஷ்ணன் தான், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவன், அந்த பகுதியில் இதற்கு முன்பு அதிகாலை நேரத்தில் வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட் போட்டவன் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவனைக் கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், “தினமும் வீடு வீடாகப் பால் போடும்போது, யார் வீட்டில் ஆட்கள் இருப்பார்கள்? யார் வீட்டில் ஆட்கள் இருக்கமாட்டார்கள்?” என்பதை அவன் நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததாகவும், முதல்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.