திருமண செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி 
உள்ளது.

சென்னை ஆவடி அருகில் உள்ள திருநின்றவூர் நத்தம்பேடு பகுதியில் இருக்கும் கம்பர் தெருவைச் சேர்ந்த 23 வயதான நரேந்திரன், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நரேந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. 

அதே போல், திருநின்றவூர் சுதேசி நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், அந்த சிறுமியின் வசிகரத்தைப் பார்த்து சபலப்பட்ட நரேந்திரன், அந்த சிறுமிக்கு காதல் வலை விரித்ததாக தெரிகிறது.

அத்துடன், தனக்குத் திருமணமானதை மறைத்து அந்த 16 வயது சிறுமியை, தனது காதல் வலையில் வீழ்த்தி, அந்த சிறுமியுடன் அவன் பழகி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும், அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, பல முறை அந்த சிறுமியை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளார்.

அத்துடன், அந்த சிறுமியிடம் பேசி பேசிய மயக்கிய நரேந்திரன், அந்த சிறுமியைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, அந்த சிறுமி தற்போது கர்ப்பமாகி உள்ளார். இந்த விசயம், எப்படியோ சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் இது பற்றி விசாரித்து உள்ளனர்.

அப்போது, காதலன் நரேந்திரன் பற்றி அந்த சிறுமி அழுதுகொண்டே கூறி உள்ளார். இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நரேந்திரன் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார், வழக்குப் பதிவு செய்து, நரேந்திரனை விசாரித்தனர். அப்போது, அவர் சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 

அதே நேரத்தில், நரேந்திரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து. நரேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.