நவம்பர் 21-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி என அறிவிக்கப்பட்டது. மேலும் அதிமுகவிடம் அதிக சீட் கேட்டு அழுத்தம் கொடுக்கவே அமித்ஷா எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் எனவும் சொல்லப்பட்டது. 


இப்பொழுது மீண்டும் அமித் ஷா 14-ஆம் தேதி, துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வருகிறார். அதிமுக தலைமையிலான கூட்டணி தான் அமையும் என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிய நிலையில் , இந்த முறை மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. 


மேலும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் பாஜகவுக்கு ஆதரவு கேட்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.